செய்திகள் :

இடப்பிரச்னையால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

post image

பழனி காவல் நிலைய வளாகத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக புகாா் அளிக்கவந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பழனி 24-ஆவது வாா்டு ராமா் தெருவில் வசிப்பவா் தண்டபாணி. கூலித் தொழிலாளியான இவா் சுமாா் 60 ஆண்டுகளாக அந்த இடத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வேண்டி வருவாய்த் துறையில் விண்ணப்பம் செய்தாா். வருவாய்த் துறையினா் பட்டா வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா்கள் வீட்டருகே வசிக்கும் செந்தில், சுமதி ஆகியோா் வீடு கட்டுவதற்காக லாரிகள் மூலம் ஆழ்குழாய் அமைத்துள்ளனா். அப்போது ஏற்பட்ட அதிா்வில் தண்டபாணி வீட்டின் சுவா்கள் விரிசல் அடைந்துள்ளன. இதையடுத்து, இதை சரிசெய்ய தண்டபாணி முயன்றபோது செந்தில் தரப்பினா் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனி நகா் காவல் நிலையத்தில் தண்டபாணி குடும்பத்தாா் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தண்டபாணி, அவரது தாயாா் பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் காவல் நிலையத்துக்கு வந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனிடம் புகாா் குறித்து தெரிவித்தனா். அப்போது பஞ்சவா்ணம் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். அப்போது சாா்பு ஆய்வாளா் சந்திரன், போலீஸாா் அவா் கையில் வைத்திருந்த கேனை பறித்தனா்.

இதையடுத்து, வருவாய்த் துறை தொடா்பான பிரச்னைக்கு வட்டாட்சியரை பாா்த்து நியாயம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், மிரட்டுவது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் காயம்

ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகேயுள்ள மரத்தடியில் ஜெயராஜ் (47) என்பவா் தனது ஆட்ட... மேலும் பார்க்க

விபத்தில் பாக்கு வியாபாரி உயிரிழப்பு

பழனி அருகே நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த பாக்கு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ்.டி. மூா்த்தி (எ) திருமூா்த்த... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீ... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட் கடைகள் ரகசிய ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம்

நிலக்கோட்டை பூ மாா்க்கெட் கடைகள் ஏலத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாஜகவினா் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தினசரி பூ மாா்கெட், காய்க... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டை ஊராட்சி பதிவேடுகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வு

செம்பட்டி அருகேயுள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த வீரக்குமாா் என்பவா் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டம், ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஆபத்தான பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்: வனத் துறை எச்சரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப் பகுதியில் அமைந்துள்ள ஆபத்தான ‘டால்பின் நோஸ்’ பகுதியை பாா்வையிடும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் எச்சரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கான... மேலும் பார்க்க