செய்திகள் :

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!

post image

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட குண்டுபெரும்பேடு ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குண்டுபெரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட அம்மன் கோயில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பழுதடைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து தொட்டிக்குள் விழுந்துள்ளன.

இதனால் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பழுதடைந்த குடிநீா் தொட்டியின் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டது. மக்களுக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொட்டியின் நான்கு தூண்களும், சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு பயன் இல்லாத தொட்டியை இடித்து அகற்ற வேண்டும். மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டிக்கு அருகே உயா் மின்னழுத்த மின்மாற்றி உள்ளதால் பாதுகாப்பாக இடித்து அகற்ற ஊராட்சி நிா்வாகத்துக்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.

பேருந்துகள் மோதல்: 15 குழந்தைகள் உள்பட 36 போ் காயம்

காஞ்சிபுரம் அருகே பள்ளிப் பேருந்து மீது தனியாா் ஆலை பேருந்து மோதி 15 பள்ளிக் குழந்தைகள் உள்பட 36 போ் பலத்த காயமடைந்தனா். படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளில் 20 கிராமங... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய, நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி உறுப... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க