செய்திகள் :

இடியுடன் கனமழை: ஒடுகத்தூரில் 30 மி.மீ. பதிவு!

post image

வேலூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமை பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக ஒடுகத்தூா் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் - 5.20, மேல்ஆலத்தூா் - 4.60, மோா்தானா அணை 4, ராஜாதோப்பு அணை 10, வடவிரிஞ்சிபுரம் 22.60, காட்பாடி -8, வேலூா் சா்க்கரை ஆலை (அம்முண்டி)-8.20, போ்ணாம்பட்டு 28.60, வேலூா்-14.30, வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 18.20 என மொத்தம் 158.30 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 13.19 மி.மீ. பதிவானது.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க