செய்திகள் :

`இடைத்தேர்தல் தேவைற்றது; ஒரே நாடு ஒரே தேர்தல்தான் தீர்வு' - பாஜக எம்.எல் ஏ சரஸ்வதி கருத்து

post image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதி வாக்காளரான பாஜக-வைச் சேர்ந்த மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக தேர்தலைப் புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்துள்ளேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. மக்களிடம் இதனால் உற்சாகம் இல்லை. தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், அரசுக்கும் வீண் செலவு ஏற்படுகிறது.

சரஸ்வதி

இதைத் தடுக்க ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் அந்த தொகுதியில் ஏற்கெனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்குத் தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பெரிய கட்சிகள் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் வேறு கட்சியை முன்னிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! - கரூர் களேபரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து ... மேலும் பார்க்க

விகடன் இணையதள முடக்கம்: ``மிகத் தவறான முன்னுதாரணம்'' - மு.குணசேகரன் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதள... மேலும் பார்க்க

திருவாரூர்: சாதிச் சான்றிதழ் கேட்டுப் பழங்குடியின மக்கள் போராட்டம்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரத்தை ஒட்டியுள்ளது கழுவமுள்ளி ஆற்றங்கரை தெரு. கடந்த 40 ஆண்டுக்காலமாகஅந்தப் பகுதி பழங்குடி மக்கள் தங்களது குழந்தைகளின் சாதிச் சான்றுகளுக்காகப் போராடி வருகின்றன... மேலும் பார்க்க

பண மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்கவிருந்த அறிவாலயம்; பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்தவர் வேதா சீனிவாசன் என்கிற வேதா ஸ்ரீனிவாஸ்.கடந்த நவம்பர் மாதமே இவர்மீது பண மோசடி, மிரட்டல் புகார்கள் வந்ததையடுத்து, திமுக தலைமை அவர்... மேலும் பார்க்க

வேலூர்: `கலகலத்துப் போன மாநாடு' - சொதப்பிய கே.சி.வீரமணி, அப்செட் எடப்பாடி?

வேலூர் கோட்டை மைதானத்தில், நேற்று (பிப்ரவரி 16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான... மேலும் பார்க்க