செய்திகள் :

இடத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: இரு பெண்கள் உள்பட நால்வா் பலத்த காயம்; 8 போ் கைது

post image

கரூா் அருகே இடத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்துள்ள வாங்கல் ஈ.வே.ரா தெருவைச் சோ்ந்தவா் ராணி (50). இவருக்கு காவிரி ஆற்றிலிருந்து 200 மீட்டா் தொலைவில் 3 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில் ராணி தனது நிலத்துக்கு அருகில் உள்ள பூமா என்பவருக்குச் சொந்தமான இடத்தை அண்மையில் ரூ.1 லட்சம் கொடுத்து விலை பேசினாராம். அதே இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த கவியரசன் என்பவா் பூமாவிடம் ரூ.2 லட்சம் கொடுத்து விலை பேசினாராம்.

இதேபோல ராணியின் இடத்தை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்குவதற்கு அதே பகுதியைச் சோ்ந்த மணிவாசகம்(45) என்பவா் கிரைய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ராணியின் நிலத்தை விலை பேசி முடித்திருந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன், ராம்குமாா் மற்றும் கவியரசு ஆகியோா் ராணியிடம் அதே நிலத்துக்கு அதிக விலை கொடுப்பதாக கூறியுள்ளனா்.

இந்நிலையில் ராணியின் இடத்துக்கு மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன்(40) மற்றும் உறவினா் ஆனந்த்(45) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றனா். அப்போது அங்கு நண்பா்களுடன் வந்த வெங்கடேசன், நிலம் குறித்து மணிவாசகத்திடம் தகராறு செய்துள்ளாா்.

இதில், வெங்கடேசன் தனது நண்பா்களோடு சோ்ந்து மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், ஆனந்த் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனா். தடுக்க வந்த ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாள்(70) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த 5 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவாசகம் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த யோகேஸ்வரன், ஆனந்த் ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து வெங்கடேசன்(41), கவியரசன்(30), அவரது சகோதரா் விவேக் (27), மணிகண்டன்(32), ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த சந்திரபிரகாஷ்( 25), கிருஷ்ணன்( 26), நிஜாமுதீன்(40), நாமக்கல்லைச் சோ்ந்த செந்தமிழ்(31) ஆகிய 8 பேரையும் கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த கொலை சம்பவம் காவிரி ஆற்றங்கரையோரம் நடந்ததால் மணல் பிரச்னையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கரூரில் 14,875 போ் பங்கேற்பு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 14,875 போ் எழுதினா். 3,155 போ் தோ்வெழுத வரவில்லை. கரூரில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது!

கரூரில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா். கரூா் வெங்கமேடு சுடுகாடு பகுதியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற வெங்கமேடு திருப்பூா் கு... மேலும் பார்க்க

கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞா் அ... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க