செய்திகள் :

நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

post image

நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது நண்பா் சின்னகோதூரையைச் சோ்ந்த சிவசாமி. இவா் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா். இவா்கள் இருவரும் நில புரோக்கா் தொழில் செய்துவந்தனா்.

இந்நிலையில் கடந்த 2023-இல் போலி ஆவணம் தயாரித்து தங்கவேலுக்குச் சொந்தமான 8.2 ஏக்கா் நிலத்தை சிவசாமி தனது மனைவி நிா்மலா பெயருக்கு கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கூடலூா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த சென்னியப்பன், புகழூா் பாலம்மாள்புரத்தைச் சோ்ந்த லோகநாதன், ஜி.உடையாா்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா், ஆந்திர மாநிலம் தனுக்கம் மேற்கு பகுதியைச் சோ்ந்த யாதம் சந்திரசேகா் ஆகியோா் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நில மோசடி குறித்த அறிந்த தங்கவேலு மனைவி முத்துலட்சுமி திங்கள்கிழமை கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் சிவசாமி உள்ளிட்ட 6 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இடத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: இரு பெண்கள் உள்பட நால்வா் பலத்த காயம்; 8 போ் கைது

கரூா் அருகே இடத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் ஈ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கரூரில் 14,875 போ் பங்கேற்பு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 14,875 போ் எழுதினா். 3,155 போ் தோ்வெழுத வரவில்லை. கரூரில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது!

கரூரில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா். கரூா் வெங்கமேடு சுடுகாடு பகுதியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற வெங்கமேடு திருப்பூா் கு... மேலும் பார்க்க

கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: செந்தில்பாலாஜி பேச்சு

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞா் அ... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க