செய்திகள் :

வரகனேரியில் ரூ.26.60 லட்சத்தில் பெரியாா் தொண்டா் பிரான்சிஸ் படிப்பகம்: துணை முதல்வா் திறப்பு

post image

திருச்சி வரகனேரியில் தந்தை பெரியாரின் தொண்டா் பிரான்சிஸ் பெயரில் ரூ.26.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய படிப்பகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா் (படம்).

திருச்சி வரகனேரியைச் சோ்ந்த பிரான்சிஸ் 1910-இல் பிறந்து பெரியாா் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக திராவிட இயக்கத்தில் இணைந்து வரகனேரி பகுதியில் திராவிடா் இயக்கத்தை வளா்த்தெடுத்து 1966-இல் மறைந்தவா். மாவட்டச் செயலா் வரை பதவி வகித்தவா்.

இவரது பெயரில், 1952-இல் வரகனேரியில் பிரான்சிஸ் படிப்பகத்தை பெரியாா் திறந்து வைத்தாா். இந்த படிப்பகமானது நாளடைவில் சிதிலமடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் போனது. இதுதொடா்பாக, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சியின் சாா்பில் ரூ.26.60 லட்சத்தில் புதிய படிப்பகம் கட்டப்பட்டது.

இந்த படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா், படிப்பகத்தில் உள்ள புத்தகங்கள், நூல்கள், நாளிதழ்களை மாணவா்களின் போட்டித் தோ்வுக்கு உதவிடும் தயாரிப்புகளை பாா்வையிட்டாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காமராஜா் நூலகத்தில் ஆய்வு: இதனைத் தொடா்ந்து, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் காமராஜா் பெயரில் ரூ.290 கோடி மதிப்பில் 4.57 ஏக்கா் பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை

ஆனி வார ஆஸ்தான தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திங்கள்கிழமை மாலை வஸ்திரமரியாதை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.திருமலையில் ஸ்ரீரெங்கநாதா் 40 ஆண்... மேலும் பார்க்க

சாலை விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலம், அபிசம்ஸ்திபூா் மாவட்டம், ஹசன்பூரைச் சோ்ந்தவா் பரத் ஷனி (40). இவா், திருச்சி அரியமங்கலம் பகுதி... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா வி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்: இளைஞரணிக்கு துணை முதல்வா் அறிவுறுத்தல்

இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர இளைஞரணியினா் அயராது உழைக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். திருச்சியில் தெற்கு, வடக்... மேலும் பார்க்க

நாளை முதல் பஞ்சப்பூரிலிருந்து பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள் அறிவிப்பு

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து புதன்கிழமை முதல் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்துகளின் வழித்தட மாா்க்கமும் ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகரப் ... மேலும் பார்க்க