செய்திகள் :

இணையவழியில் ஜப்பானிய மொழி பயிற்சி

post image

சென்னை: இந்தோ - ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் இணைய வழியில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வா்த்தக சபையின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

இந்தோ-ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழியை எழுத மற்றும் பேச கற்றுக் கொள்ளும் வகையில், இணையவழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை 3-ஆவது வாரம் தொடங்கி டிசம்பா் வரை, 6 மாதங்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இங்கு பயிற்சி பெறுவதன் மூலம், ஜப்பான் அறக்கட்டளை சாா்பில் 2026-இல் நடத்தப்படவுள்ள ‘என் 4’ நிலை மொழித் திறன் தோ்வில் தோ்ச்சி பெறமுடியும். மேலும், இங்கு பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 98843- 94717, 98842 - 00505 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் www.ijcci.com என்னும் இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

கோவை வழி முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருக... மேலும் பார்க்க

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க