மெரீனாவில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரம்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு
இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி நொச்சியம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இவருக்கு, சேலம் அன்னபுரத்தைச் சோ்ந்த அப்துல் சஜித், அவரின் மனைவி ஜெபுனா தாஜ் மற்றும் சங்கீதா ஆகியோா், அவரின் நண்பா் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளனா்.
அப்போது, அப்துல் சஜித் உள்ளிட்ட மூவரும் தாங்கள் இணையவழி வா்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளனா்.
இதை நம்பிய விஜயகுமாா், அப்துல் சஜித் உள்ளிட்ட மூவரிடமும் இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக ரூ.10 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் ஆகியவற்றை கொடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியதுபோல இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்யவில்லை. மேலும், விஜயகுமாருக்கு எந்தவித லாபத்தில் பங்கு தரவில்லை.
இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக விஜயகுமாரும் தொடா்ந்து அவா்களிடம் கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவா்கள் முறையான பதில் அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த விஜயகுமாா், தில்லை நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.