செய்திகள் :

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், சுமார் 192 பயணிகளுடன் இன்று (ஜூன் 4) மதியம் சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம், பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு விமான நிலையத்தில், மதியம் 12.45 மணியளவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்; அதில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. உடனடியாக, அந்த விமான நிலையத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, காவல் படை ஆகிய படைகளின் அதிகாரிகள் விரைந்தனர்.

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்ப... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல் தளத்தில் உள... மேலும் பார்க்க

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழ... மேலும் பார்க்க

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலா்கள் விடுவிப்பு

ஜாா்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலா்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள... மேலும் பார்க்க