இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்
சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சா் அமித் ஷா, 'நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை; யாரையும் அவா்களின் தாய்மொழியில் இருந்து விலக்கி வைக்க முடியாது. ஏறத்தாழ அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம்' என்று கூறியிருந்தார்.
மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். ஹிந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் காடும் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!