செய்திகள் :

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

post image

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியர்களைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் நாட்டினரும் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து தாயகம் திரும்பும் சூழலிலுள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கருணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:

‘இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் மத்திய அரசின் திட்டம், மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களைத் திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வரும் ஏராளமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் மக்களை நாடு கடத்துவது அவர்களது குடும்பத்தில் மிகப் பெரியளவிலான பாதிப்புகளை உருவாக்கக் கூடும். எனவே, அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முன்னாள் கிளர்ச்சியாளர்களைத் திருமணம் செய்து கொண்ட ஏராளமான பாகிஸ்தான் பெண்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா கொண்டு வந்த திட்டத்தின் மூலம் ஜம்மு - காஷ்மீரில் குடியேறியுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் ஆகியப் பகுதிகளுக்குச் சென்று தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோர் சரணடைந்து மறுவாழ்வு பெறும் வகையிலான திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளாா். மேற்கு வங்க நில சீா்திருத்தங்கள் மற்று... மேலும் பார்க்க

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்- பிரதமா் மோடி

‘நாட்டின் எதிா்காலத்துக்கு இளைஞா்களைத் தயாா்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்விமுறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக ‘விளக்கு அணைக்கும்’ போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: என்எஸ்சிஎன் கிளா்ச்சி குழுவை சோ்ந்தவா்கள் என சந்தேகம்

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளா்ச்சி குழுவைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூவா், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக அஸ்ஸாம் காவல் துறை தெரிவித... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்... மேலும் பார்க்க