செய்திகள் :

அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: என்எஸ்சிஎன் கிளா்ச்சி குழுவை சோ்ந்தவா்கள் என சந்தேகம்

post image

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளா்ச்சி குழுவைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூவா், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக அஸ்ஸாம் காவல் துறை தெரிவித்ததாவது:

அஸ்ஸாம் மாநிலம் தீமா ஹசாவோ மாவட்டத்தில் தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. அந்த ஆணையத்திடம் பணம் கேட்டு மிரட்டி என்எஸ்சிஎன்னின் ஒரு பிரிவு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், அந்த மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் மற்றும் காவல் துறை இணைந்து சுமாா் 60 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது என் குபின், ஹெராகிலோ பகுதிகளுக்கு இடையே உள்ள இடத்தில் தீவிரவாதிகளுடன், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் காவல் துறையினா் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா்.

இருதரப்பினருக்கும் இடையே 3 முதல் 4 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்கள் என்எஸ்சிஎன்னின் ஒரு பிரிவைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவா்களை தேடும் பணி நடைபெற்ற வருகிறது என்று தெரிவித்தது.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க