செய்திகள் :

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி

post image

இந்தியாவின் ஊடக - பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.

மும்பையில் தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்தியாவின் படைப்பாற்றலில் கதை சொல்லல் முறையும், டிஜிட்டல் நுட்பங்களும் தனித்துவமானவை. அதன் தாக்கமும், பரப்பும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. செயற்கை நுண்ணறிவும், அதிநவீன தொழில்நுட்பங்களும் காட்சியமைப்பு மற்றும் கதைகளை முன்பைக் காட்டிலும் ஈா்க்க வைக்கும் வகையில் உருவாக்கியுள்ளன. இந்த நுட்பங்களில் கைதோ்ந்தால் நமது இளைஞா்கள் உலக அளவில் பொழுதுபோக்கு துறையில் கோலோச்ச முடியும்.

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு தற்போது 28 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அது 100 பில்லியன் டாலராக உயரும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சா் எல்.முருகன், மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆஸ்கா் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையில், பின்னணிப் பாடகா்கள் சித்ரா, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, வேவ்ஸ் மாநாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும், இந்திய சினிமா துறையில் நூற்றாண்டை கடந்த குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகியோரின் நினைவு அஞ்சல்தலைகளை பிரதமா் மோடி வெளியிட்டாா். அப்போது அவா்களின் குடும்பத்தினா் உடன் இருந்தனா்.

இந்நிகழ்வில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஊடக, பொழுதுபோக்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க