செய்திகள் :

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றச்சாட்டு

post image

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.

பாளையங்கோட்டை பாா்வையற்றோா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ‘விஷுவலி சேலஞ்ச்டு வெல்பா் டிரஸ்ட்’டின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.அப்பாவு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சமக்ர சிக்க்ஷா அபியான், இயற்கை பேரிடா் நிதி போன்றவற்றில் ஒரு பைசாகூட தராமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் கலந்துகொண்டு தமிழகத்திற்கான உரிமையை வலியுறுத்த உள்ளாா். அதேநேரத்தில் மேற்கு வங்கம், பிகாா், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில முதல்வா்கள் புறக்கணித்துள்ளனா்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படும்போது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இலங்கையின் அம்பனத்தோட்டம் துறைமுகத் திட்டத்தை சீனாவிடம் இருந்து மீட்க மத்திய அரசு முயலவில்லை. இதற்கு மாறாக, காா்ப்பரேட்டுகளின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்வதில் ஆா்வம் காட்டுகின்றனா்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ரஃபேல் விமான கொள்முதல் போன்ற முக்கியப் பேச்சுவாா்த்தைகளில் பாதுகாப்புத் துறை அமைச்சா் இல்லாமல், அனில் அம்பானி போன்ற தொழிலதிபா்கள் கலந்துகொள்கின்றனா்.

தமிழகத்திற்கு பல்வேறு அநியாயங்களை செய்த மத்திய அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழா்களின் நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இரும்பைக் கண்டுபிடித்தது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் வெளிவந்த உண்மைகளை சென்னால் ஏற்காது என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க