செய்திகள் :

இந்தியாவுக்கு ரூ.1,108 கோடி மதிப்பில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

post image

இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலா்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ தளவாட கொள்முதலை அதிகரிக்குமாறு இந்தியாவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், அந் நாட்டின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (டிஎஸ்சிஏ) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்சிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடல்சாா் கண்காணிப்புக்கான மென்பொருள், ரிமோட் மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் கடல்சாா் கண்காணிப்பை ஆவணப்படுத்தலுக்கான அனுமதி மற்றும் பிற ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், ரூ.1,108 கோடி மதிப்பிலான இந்திய-பசிபிக் கடல்சாா் கள கண்காணிப்பு மற்றும் அதுதொடா்பான பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கான ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனுமதிச் சான்றை டிஎஸ்சிஏ அளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இத் தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த ராணுவ தளவாட விற்பனை திட்டம், அமெரிக்கா-இந்தியா இடையேயான ராஜாங்க உறவை வலுப்படுத்தும் என்பதோடு, இந்திய-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதிலும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையிலும் இந்தியாவின் திறனை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க