செய்திகள் :

``இந்தியாவுடனான மோதலில் சீனா உதவவில்லை; எங்கள் திறமை தான்..'' - பாகிஸ்தான் ராணுவத் தளபதி சொல்வதென்ன?

post image

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்திய அரசு.

அதன் ஒரு பகுதியாக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவே 4 நாள்கள் கடும் மோதல்கள் நடைபெற்றன.

ஆப்பரேஷன் சிந்தூர்

இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து உளவுத் தகவல்கள் கிடைத்ததாக இந்தியா தரப்பில் கூறப்பட்டு வந்த சூழலில், அது உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்.

இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தானின் இறையாண்மையை சீர்குலைக்கும் எந்த ஒரு எதிர்பாராத தாக்குதலுக்கும் கட்டுப்பாடுகள் இல்லாத விரிவான உறுதியான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார் அவர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பன்யானம் மர்சூஸ் நடவடிக்கை (Operation Bunyanum Marsoos) என அழைக்கப்படுகின்றன.

இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம்

இந்த தாக்குதலில் வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது என்றும், நீண்ட நாள்கள் உழைப்பின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் ஏற்படுத்திக்கொண்ட திறன்களை ஒப்புக்கொள்ள மறுப்பதனாலேயே இந்த பொய்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார் அவர்.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் மூன்றாவது நாட்டின் பெயரைச் சேர்ப்பது இந்தியாவின் 'முகாம் அரசியல்' முயற்சி என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், "ஊடக சொல்லாட்சியோ, இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரமான ஆயுதங்களோ அல்லது அரசியல் கோஷங்களோ போர்களை வெல்வதில்லை. நம்பிக்கை, தொழில்முறை திறன், செயல்பாட்டு தெளிவு, நிறுவன வலிமை மற்றும் தேசிய உறுதிப்பாடு ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கின்றன" என்றும் கூறியுள்ளார்.

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத்தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான்அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறத... மேலும் பார்க்க

`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்!| In Depth

``இனி சின்ராச கையிலேயே புடிக்க முடியாதுங்க..." என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் வந்துவிட்டால் தூங்கி வழிந்த அரசியல்வாதியிலிருந்து ஆக்ரோஷமாக அறிக்கைவிட்டுக்கொண்டிருந்த அரசியல்வாதிவரை எல்லோருக்கும் சுறுச... மேலும் பார்க்க

``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிறார்.." - சேகர்பாபு

திருப்பரங்குன்றம் கோயிலில் வருகின்ற திங்கட்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி,... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி'' - மதுரையில் பகிரங்கமாக அறிவித்த வைகோ

மதுரையில் நடந்த மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.செயல்வீரர் கூட்டத்தில்முன்னதாக செய்தியாளர்களிட... மேலும் பார்க்க

Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?

''ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுர... மேலும் பார்க்க

மும்பை: ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம்; சிவசேனா அமைச்சர் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?

மும்பை மீரா பயந்தர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோத்பூர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் பணியாற்றிய ஊழியர் மராத்தி பேசாததால் அவரை மராத்தி பேசச்சொல்லி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர் அடித... மேலும் பார்க்க