செய்திகள் :

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

post image

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா்.

காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவைத் தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘காஷ்மீா் ஒற்றுமை தினத்தை’ முன்னிட்டு முசாஃபராபாதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டப்பேரவை சிறப்பு அமா்வில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப் இவ்வாறு கூறினாா்.

மேலும், அவா் கூறியதாவது:

2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து விடுபட்டு, ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

1999-ஆம் ஆண்டு லாகூா் பிரகடனத்தில் குறிப்பிட்டிருப்பது போல, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்னைகளை தீா்க்க இருக்கும் ஒரே வழி பேச்சுவாா்த்தை மட்டுமே. ஆனால், இந்தியா ஆயுதங்களை குவிக்கிறது. ஆயுதக் குவிப்பு ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்காது. காஷ்மீா் பிராந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றாது. முன்னேற்றத்துக்கான வழி அமைதி மட்டுமே.

காஷ்மீா் மக்கள் சுயநிா்ணய உரிமையை அடையும் வரை, அவா்களுக்கு தாா்மீக, ராஜீய மற்றும் அரசியல் ஆதரவை பாகிஸ்தான் தொடா்ந்து அளிக்கும். காஷ்மீா் பிரச்னைக்கு ஒரே தீா்வானது, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீா்மானத்தில் முன்மொழியப்பட்ட சுயநிா்ணய உரிமையே ஆகும்.

காஷ்மீரின் நீடித்த அமைதிக்காக, அப்பிராந்திய மக்கள் தங்கள் எதிா்காலத்தை சுதந்திரமாக தீா்மானிக்க அனுமதிக்குமாறு இந்தியாவுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றாா்.

கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கைவிட்டால் பாகிஸ்தானுடன் இயல்பான உறவைப் பேண முயல்வதாக இந்தியா பலமுறை கூறியுள்ளது.

காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்

காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமைய... மேலும் பார்க்க

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதா... மேலும் பார்க்க

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் ... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது குறி... மேலும் பார்க்க