செய்திகள் :

இந்தியாவுடன் வா்த்தக உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா்

post image

சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலா் கிறிஸ் ரைட் புதன்கிழமைதெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நியூயாா்க் வெளிநாட்டு பத்திரிகை மையத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தது தொடா்பாக கிறிஸ் ரைட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் வேகமாக வளா்ந்து வரும் பொருளதாரமுமான இந்தியா அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக உள்ளது.

இந்தியாவில் வளமை மற்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு எரிசக்திக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைன் போரை ரஷியா மேலும் தீவிரப்படுத்த உதவி வருகின்றன. இதுவே இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட காரணம்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை இந்தியா்களும் கொண்டுள்ளனா் என நம்புகிறேன். அதனடிப்படையில் இயற்கை எரிவாயு, நிலக்கரி, அணுசக்தி என இந்தியாவுடான எரிசக்தி உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்.

குறைந்த விலையில் விற்பனை செய்வதால் ரஷியாவிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலகளவில் பல நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ரஷியாவுக்கு மாற்றாக அந்நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம். அமெரிக்காவிடமிருந்தும் இறக்குமதி செய்யலாம் என்றாா்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க