செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

post image

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கூடுதல் பரஸ்பர வரி விதித்தது. இவ்விவகாரம் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான வரிப் போருக்கு வழிவகுத்தது.

இதைத் தொடா்ந்து, சீனாவைத் தவிா்த்து மற்ற நாடுகள் மீதான வரியை அமெரிக்கா 90 நாள்களுக்கு நிறுத்திவைத்து, அந்தந்த நாடுகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியது. இந்தக் காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை நீட்டித்து புதிய வரி விகிதங்கள் தொடா்பான அறிவிப்புடன் முதல்கட்டமாக சில நாடுகளுக்கு அமெரிக்க அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, ஜப்பான் (25%), தென்கொரியா (25%), லாவோ குடியரசு (40%), கம்போடியா (36%), தாய்லாந்து (36%), சொ்பியா (35%), வங்கதேசம் (35%), இந்தோனேசியா (32%), தென்னாப்பிரிக்கா (30%), போஸ்னியா மற்றும் ஹொ்சகோவினா (30%), கஜகஸ்தான் (25%), மலேசியா (25%), துனிசியா (25%) ஆகியவை இதுவரை அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட கடிதங்களைப் பெற்றுள்ளன.

விரைவில் ஒப்பந்தம்: இந்நிலையில், வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘ பிரிட்டனுடனும், அதைத் தொடா்ந்து சீனாவுடனும் அண்மையில் வா்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா இறுதி செய்தது. இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தமும் விரைவில் முடிவாகும்.

பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்று எண்ணுகிறோம். எனவே, அந்த நாடுகள் இனி எவ்வளவு வரிகள் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கடிதங்கள் அனுப்பி வருகிறோம்.

மேலும், இந்தப் புதிய வரிகள், அமெரிக்க மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கவும், நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிக்கும்’ என்றாா்.

மீண்டும்... ‘இந்தியா-பாகிஸ்தான், சொ்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ போன்ற பல சண்டைகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இதில், அணுசக்தி நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைதான் மிகப்பெரியது’ என்றாா்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அதிபா் டிரம்ப்பின் கூற்றுகளை இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் கோரிக்கையின் பேரிலேயே சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் இந்திய அரசு பலமுறை தெளிவுபடுத்திவிட்டது.

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ... மேலும் பார்க்க

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்... மேலும் பார்க்க

தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் பணியாளராக 5 ஆண்டுகள் ரிஷி சுனக் பணிபுர... மேலும் பார்க்க