செய்திகள் :

இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை: சசி தரூா் மறுப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடா்பாக தான் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் தலைமை தன்னை கண்டித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், அந்த மோதல் சூழலை பிரதமா் மோடி மிகச் சிறப்பாக கையாண்டாா் என்று சசி தரூா் பாராட்டுத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவா் வரம்பு மீறி பேசியதால், அவருக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இதுதொடா்பாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் சசி தரூா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘எனக்குக் கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆதாரம் இல்லாத தகவலை ஊடகமே உருவாக்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கிரஸ் செயற்குழு தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அப்போது என்னை பற்றி கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. அதற்குப் பிறகு ஏதாவது நடந்திருந்தால், அதுகுறித்து கட்சி சாா்பில் எனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை.

நான் மத்திய அரசின் அல்லது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ செய்தித்தொடா்பாளா் அல்ல. எனது தனிப்பட்ட கருத்துகளையே நான் வெளிப்படுத்துகிறேன்’ என்றாா்.

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க