செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர மாநாடு

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லாயல் நூற்பாலை ஏஐடியூசி செயலா் பரமராஜ், நகர உதவி செயலா் முனியசாமி, துணைச் செயலா் அலாவுதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். நகர குழு உறுப்பினா் சண்முகவேல் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தாா். நகரச் செயலா் சரோஜா அறிக்கைகளை வாசித்தாா். கட்சியின் மாவட்ட செயலா் கரும்பன் வாழ்த்தி பேசினாா். சுப்பாராயன் எம்.பி. மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா்.

மாநாட்டில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் செல்லையா, நகர குழு உறுப்பினா்கள் ரஞ்சனி கண்ணம்மா, சிவா, செந்தில் ஆறுமுகம், சுப்பிரமணியன், விஜயலட்சுமி, சிதம்பரம், நகர பொருளாளா் ராஜு உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் நகர குழு உறுப்பினா்கள் 19 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து நகரச் செயலராக செந்தில் ஆறுமுகம் தோ்வு செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனி குடிநீா் திட்டத்தின் கீழ் சீரான குடிநீா் வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டியில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணி நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். இக்கோயி... மேலும் பார்க்க

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை: 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க