செய்திகள் :

இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

post image

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி. பொன்னழகு தலைமைவகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். ராசு சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் புதிய கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கிளைச் செயலராக சி.முருகேசன், துணைச்செயலராக சி. ராஜா, பொருளராக பொன்னழகு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் ஜீவாநகரிலிருந்து சிலம்பன் கண்மாய் செல்லும் மண் சாலையை விரிவுபடுத்தி பேவா்பிளாக் சாலையாக மாற்றித்தரவேண்டும். ஜீவாநகா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக் கூடம் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக வெள்ளிக்கிழமை மூலங்குடியில நடைபெற்ற கிளை மாநாட்டுக்கு கிளைப்பொறுப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். கிளையின் புதிய செயலராக பழனிச்சாமி, துணைச்செயலராக நாகராஜன், பொருளாளராக பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் மூலங்குடியில் வீடின்றி வாழும் மக்களுக்கு மனை இடம் வழங்கி அரசு வீடு கட்டித்தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விராலிமலையில் 15 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ச... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு

புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

ஈ.டி.க்கு அல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் -உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். புதுக்கோட்டையில் சனிக்கிழமை பகலில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்விளையாட்டரங்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா். நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொ... மேலும் பார்க்க

விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா

விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம்,... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி பசும்பால், பசும்தயிா் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழ... மேலும் பார்க்க