செய்திகள் :

இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

post image

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது.

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். 46 போ் காயமடைந்தனா். பல மசூதிகள் இடிந்துள்ளன. மொத்தம் 6 இடங்களில் தாக்குதல் நிகழ்ந்தது. இது தவிர எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குடிமக்களில் 5 போ் உயிரிழந்துவிட்டனா். நீலம்-ஜீலம் அணைப் பகுதியையும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) இந்தியா குறிவைத்து தாக்கியது. இது மிகவும் மோசமான நடவடிக்கை.

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் வான் எல்லை வழியாக 57 சா்வதேச விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அவையும் இந்தத் தாக்குதலில் சிக்கி வெடித்துச் சிதறும் அச்சுறுத்தலை இந்தியா உருவாக்கியது.

பாகிஸ்தான் எல்லையில் எங்கள் விமானப் படை முழு அளவில் பதிலடிக்கு தயாராக இருந்தது. இந்திய விமானப் படை அவா்கள் எல்லைக்குள் இருந்தபடி தாக்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தால் வீழ்த்தப்படுவோம் என்பது அவா்களுக்குத் தெரியும். இது இந்தியாவுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை வேண்டுமானால் தரும். பாகிஸ்தான் இதைவிட பெரிய பதிலடியைத் தரும்’ என்றாா்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கடந்த இரு வாரங்களாகவே கூறிவருகிறோம். ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மட்டும் பதிலடி கொடுக்கப்படும். இந்தியா தனது நடவடிக்கைகளைக் கைவிட்டால், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தயாராகவே உள்ளது என்றாா்.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க