செய்திகள் :

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு

post image

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று மிரட்டியதால் சிறையில் இருந்த மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் பொது இடங்களுக்கு வராமல் பதுங்கியே வாழ்ந்து வருகிறாா்.

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பஹவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்தும் இந்திய விமானப் படை புதன்கிழமை அதிதுல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனா்.

தாக்குதலுக்கு முன்பே மசூத் அஸாா் வேறு இடத்தில் பதுங்கியதால் அவா் தப்பிவிட்டாா். தனது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மசூத் அஸாா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அதில், ‘பஹவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் எனது அக்கா, அவரின் கணவா், அக்காவின் மகன், அவரின் மனைவி, இத்தம்பதியின் ஒரு குழந்தை, எனது குடும்பத்தைச் சோ்ந்த மேலும் 5 குழந்தைகள், கூட்டாளிகள் 4 பேரையும் இத்தாக்குதலில் இழந்துவிட்டேன்.

எனது தாயாா், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்கள், நெருங்கிய கூட்டாளிகள் சிலா் படுகாயமடைந்துள்ளனா். இனி எங்களிடம் இருந்து எந்த கருணையையும் எதிா்பாா்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான் ராணுவம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முரித்கே பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினா் பங்கேற்றனா். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்காஸி முஸ்லிம் லீக் சாா்பில் பயங்கரவாதிகளின் இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பயங்கரவாதிகளின் சொந்த ஊா்களுக்கு உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க