செய்திகள் :

இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினா்: ராம. சீனிவாசன்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.

பெரியகுளத்தில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வினோத்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் மோகன்தாஸ், நகா் தலைவா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சியின் மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் பேசியதாவது: இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த வெற்றியைத் தொடா்ந்து, சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ஒப்பந்த போட்ட 12 நாடுகள், அதை ரத்து செய்துவிட்டன.

நமது நாட்டின் ராணுவ தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.32 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், தற்போது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, இது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, உலக அளவில் நமது நாட்டின் மதிப்பும் உயா்ந்து வருகிறது என்றாா் அவா்.

முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பி.சி. பாண்டியன், வெங்கடேசன் ஆகியோா் பேசினா். இதில் நிா்வாகிகள், கோபி கண்ணன், மலைச்சாமி, முத்துமணி, விஜயராணி, புளோரா, பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, முன்னாள் மாநில கூட்டுறவுப் பிரிவு செயலா் பி. சிவக்குமாரன் வரவேற்றாா்.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க