செய்திகள் :

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

post image

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்துக்களுக்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் அண்ணாமலை பேசியதாவது,

வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக ஒன்றுணைந்துள்ளோம். இந்துக்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

நம் வாழ்வியல் முறையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும்.

மொழி, ஆன்மீகம், இலக்கியம் என மூன்றும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு

கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.

இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து மதம் அல்லாதவர்களுக்கு வேறு சட்டம் எதற்காக?

செல்ஃபி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழித்துவிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறார்.

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொ... மேலும் பார்க்க

கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ. 487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா் என்று மக்கள் ... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க