செய்திகள் :

இந்த ஆண்டில் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இருக்காது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

post image

தேசியத் தலைநகரம் 2025- ஆம் ஆண்டில் வெள்ளம் போன்ற சூழ்நிலையை சந்திக்காது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா பு தன்கிழமை குடியிருப்பாளா்களுக்கு உறுதியளித்தாா். மேலும் அவரது அரசு முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறினாா்.

தில்லி செயலகத்தில் நடைபெற்ற வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

‘தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தடுப்பணையின் கதவுகள் கூட திறக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை வெள்ள நிலைமை ஏற்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். அரசும் அனைத்துத் துறைகளும் முழுமையாகத் தயாராக உள்ளன’ என்று அவா் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறினாா்.

கூட்டத்தில் கலந்து கொண்டவா்களில் அமைச்சா்கள் ஆஷிஷ் சூட் மற்றும் பா்வேஷ் சாஹிப் சிங், பாஜக எம்பிக்கள் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் அடங்குவா். மேலும், பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி (எம்சிடி), வருவாய், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனா்.

‘நாங்கள் தூா்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். பெரிய வடிகால்களில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் மேலும் கூறினாா். இந்த முறை தண்ணீா் தேங்கக் கூடாது என்று முதல்வா் உத்தரவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில் தில்லி அதன் மிக மோசமான, வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிா்கொண்டது. கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், 25,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளா்கள் வெளியேற்றப்பட்டனா்.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க