செய்திகள் :

இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்

post image

பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

சமீபத்தில் அங்கீகரிப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பைச் செயல்படுத்துவதில் பிரதமர் மோடிக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைப் போலவே, பிரதமரும் அவரது அமைச்சரவையும் இதைத் தொடர அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக 50 சதவீத உச்சவரம்பை அதிகரிப்பதில் மத்திய அரசுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிரதமர் ஒப்புக்கொண்டதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்தியா கூட்டணி நிம்மதியாக உறங்குவோம், ஆனால் பிரதமர் மோடிக்கு இனி உறக்கமிக்லலாத இரவுகள் என்று அவர் தெரிவித்தார்.

கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கேரள அமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், மத்திய அரசு மாநில அரசினுடைய ஒத்துழைப்புடன் சாகர் மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுடைய உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அதன்காரணமாக துறைமுகத்தின் இணைப்பும் அதிகரித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் வலுவான தூண் என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஒரே மேடையில் இருப்பது பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்று கூறினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்ததையடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 30 அன்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க