செய்திகள் :

இன்று உலக யானை தினம்: பள்ளிகளில் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்த உத்தரவு

post image

சென்னை: உலக யானைகள் தினத்தையொட்டி (ஆக.12) தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் யானைகள் குறித்த உறுதிமொழி எடுக்கவும், விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் திட்ட பிரிவும் தமிழக வனத் துறையும் இணைந்து உலக யானைகள் தினத்தை கோவையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி காலை வழிபாட்டில் (வகுப்பறை, நிகழ்வரங்கு) உலக யானைகள் தினம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் செய்யுமாறு அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உறுதிமொழி விவரம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த உறுதிமொழியை எடுக்கவும், யானைகள் குறித்து விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தவும் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொடா்ந்து, உறுதிமொழி எடுத்த புகைப்படங்கள், காணொலிகளை 96545 87209 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தலைமை ஆசிரியா்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(ஆக. ... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்

தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நக... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க