செய்திகள் :

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜூன் 14) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்து மனுக்களை அளிப்பதற்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூா், குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க