ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்
பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் மற்றும் புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
இதே போன்று சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூா் - புதுச்சேரி பயணிகள் ரயில் அந்த வழித் தடத்தில் தேவையான இடத்தில் 60 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இது வரும் 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் அமல்படுத்தப்படும்.
தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் இதைத் தெரிவித்துள்ளாா்.