செய்திகள் :

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

post image

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கர்நாடகா மாநிலம் சிராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நேரில் இரு முறை சந்தித்துள்ளார். அப்போது நாம் திருமணம் செய்து கொண்டால் தனியாகக் குடித்தனம் நடத்த பணம் தேவைப்படும். ஆகையால் உங்கள் வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தைக் கொண்டு வருமாறு கல்லூரி மாணவியிடம் கூறியுள்ளார்.

லிவின்
லிவின்

இதனை நம்பிய கல்லூரி மாணவி சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மதுரையில் வைத்து லிவினிம் வழங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பணம் நகைகள் மாயமானது தொடர்ந்து செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளிடம் விசாரித்த நிலையில், தான் அந்தப் பணம் மற்றும் நகைகளை எடுத்து லிவினிடம் கொடுத்ததாக மகள் கூறியுள்ளார்.

அப்போது அவருக்கு போன் செய்த லிவின், "நீ கொடுத்த பணம் பத்தாது. மேலும் பணம் வேண்டும். ஆகையால் அதை ஏற்பாடு செய்" என்று கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அந்தப் பெண் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோருடன் சென்று புகார் அளித்துள்ளார்.

ராஜபாளையம்
ராஜபாளையம்

போலீசாரின் அறிவுறுத்தலின்படி லிவினை இராஜபாளையம் ஆவாரம்பட்டிக்கு வரவழைத்து அவரிடம் கல்லூரி மாணவி பணத்தைக் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த போலீசார் லிவினைச் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிய லிவின் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார்.

இதனையடுத்து கர்நாடக மாநிலம் சிராஜ்பேட்டையில் வைத்து லிவினைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் தனது நண்பரின் மூலம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருப்பதை அறிந்த போலீசார் 21 பவுன் தங்க நகைகளை மீட்டு லிவினை அழைத்துக் கொண்டு இராஜபாளையம் திரும்பினர்.

தொடர்ந்து லிவினிடம் விசாரித்த போலீசார் சமூக வலைத்தளம் மூலம் இந்தப் பெண்ணை மட்டும் தான் ஏமாற்றினாரா அல்லது இது போல் வேறு யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா என விசாரணை நடத்தி இராஜபாளையம் நீதித்துறை நடுவர் என் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க

சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது ... மேலும் பார்க்க

`திருமணம், நட்பு, ஆபாச மெசேஜ்' - Facebook -ல் பழகிய பெண்களிடம் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர். அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் ம... மேலும் பார்க்க

அந்தியூர் குதிரை சந்தை: மர்மமான முறையில் இறந்த 6 குதிரைகள்; பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் குருநாதசுவாமி கோவிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்... மேலும் பார்க்க