செய்திகள் :

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படுகொலை தொடர்பாக நிக்கியின் கணவர் விபின், அவரது தாயார் மற்றும் மைத்துனர் ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிக்கியை எரித்துக்கொலை செய்த அவரது கணவர் விபினை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று நிக்கியின் தந்தை மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

நிக்கி, விபின்

அவர் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் விபின் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்செல்ல முயன்றதாக கூறி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் விபின் காலில் காயம் அடைந்தார்.

விபினிடம் போலீஸார் விசாரித்தபோது கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ''சம்பவம் நடந்த அன்று நிக்கி தனது கணவரிடம் தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரை திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு விபின் அனுமதி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிக்கி தானும், தனது சகோதரியும் சேர்ந்து பியூட்டி பார்லரை திறப்போம் என்றும், தங்களை யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவது, பியூட்டி பார்லர் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று விபின் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நடந்த சண்டையில் நிக்கி தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தனர்.

இன்ஸ்டா, யூடியூப் சேனல் நடத்திய சகோதரிகள்

நிக்கியும், அவரது சகோதரி காஞ்சனும் சேர்ந்து யூடிப் சேனல் நடத்தி வருகின்றனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்கள்.

Makeover by Kannchan என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 54 ஆயிரம் பாலோவர்கள் இருக்கின்றனர். காஞ்சனின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 ஆயிரம் பாலோவர்கள் இருக்கின்றனர்.

நிக்கியின் சகோதரர் குர்ஜார் இது குறித்து கூறுகையில், ''நிக்கியின் பியூட்டி பார்லருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.8 லட்சம் செலவு செய்திருக்கிறோம்.

விபின் மற்றும் அவரது சகோதரருக்கு வேலை கிடையாது. வீட்டில் சிறிய அளவில் மளிகை கடை நடத்துகின்றனர். எனது சகோதரிகள் தங்களது கணவர்களிடம் பணம் கேட்காமல் சொந்தமாக குழந்தைகளின் படிப்பு செலவை பார்த்துக்கொள்கின்றனர்.

ஆனால் விபின் குடும்பத்தினர் பியூட்டி பார்லர் நடத்த அனுமதிக்கவில்லை. அதோடு கடந்த பிப்ரவரி மாதம் பியூட்டி பார்லரையும் சேதப்படுத்திவிட்டனர்'' என்று தெரிவித்தார்.

விபின் தந்தை மற்றும் மைத்துனரும் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நிக்கியும், விபினும் திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளாக விபின் தனது மனைவி நிக்கியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

கொலை நடந்த அன்று நிக்கி தனது வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருந்த போது ஒருவர் அவர் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார். அதனை தொடர்ந்து நிக்கியை அவரது கணவர் அடித்து உதைத்தார்.

அதன் பிறகு உடம்பில் தீப்பிடித்த நிலையில் நிக்கி படிக்கட்டில் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது நெஞ்சை பதற வைத்தது.

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்ப... மேலும் பார்க்க

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூர... மேலும் பார்க்க

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

சென்னை: ``நான் காதலிக்கும் பெண்ணுடன் அவர் பழகினார்'' - 2 பேரை காரில் கடத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத... மேலும் பார்க்க