செய்திகள் :

இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

post image

தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் போட்டி வலுத்துள்ளது. நடிகர் விஜய்யும் வரும் ஆக.25 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ், கோவையில் தொடங்கும் பயணத்தை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார்.

ஜூலை 7-ல் கோவை புறநகர் வடக்கு, ஜூலை 8-ல் கோவை மாநகர், ஜூலை 10-ல் விழுப்புரம் என கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

AIADMK has announced that AIADMK General Secretary Edappadi Palaniswami will be touring across Tamil Nadu.

இதையும் படிக்க: 30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!

திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் த... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம்: மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் 7 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சேலத்தில் 4-ஆவது ... மேலும் பார்க்க

படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

படைப்பாளிகள் அவா்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். சாகித்ய அகாதெமி மற்றும் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தமிழ்த் துறை இணைந்... மேலும் பார்க்க

பருத்திக்கு விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற... மேலும் பார்க்க

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் ... மேலும் பார்க்க