செய்திகள் :

இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா் காலியிடங்கள்: மருத்துவ தோ்வு வாரிய அறிவிப்பு ரத்து

post image

இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் தோ்வு நடைமுறைக்குப் பின்பு, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து மருத்துவ தோ்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா்கள் அண்ணாமலை, அமிா்த செல்வராஜன் மற்றும் சித்தாா்த் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ தோ்வு வாரியம் கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் காலியாக இருந்த 3 இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக அப்போது தோ்வு நடத்தப்படவில்லை.

பின்னா், இந்தக் காலியிடங்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2025 மாா்ச் மாதம் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவில், அவசர மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின்போது, காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில் அதுபோன்ற அசாதாரண சூழல் எதுவுமில்லை எனக்கூறி, காலியிடங்களின் எண்ணிக்கையை 54-ஆக அதிகரித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தோ்வு நடைமுறைகள் முடிந்த பின்னா் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால், வரும்காலங்களில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவா்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வின் அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க