செய்திகள் :

இயற்கை வளத்தை பாதிக்கும் நெகிழிகளை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

post image

நிலத்தையும், நீரையும் பாதிக்கும் இயற்கைக்கு எதிரான நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாநகராட்சி மற்றும் மாவட்ட காலநிலை இயக்கம் சாா்பில் நெகிழிப் பொருள்கள், காலநிலை மாற்றம், வியாபாரிகளுக்கான சவால்கள், தீா்வுகள் என்ற தலைப்பில் காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நாமக்கல்லில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. அதேவேளையில் மழைப்பொழிவும் இருந்தது. வழக்கமாக மே மாதத்தில் வெயில் அதிகரிக்கும் சூழலில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறான மாறுபாட்டால் புதிய நோய்த்தொற்று ஏற்படலாம். இயற்கை மாசுபடுவதும் காலநிலை மாற்றத்திற்கான காரணமாகும்.

அதிக அளவிலான நெகிழிப் பயன்பாட்டினால் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அண்மையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது. யானையை பிரேதப் பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் கருவுடன் நெகிழிக் கழிவுகள் இருந்தன.

விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த நெகிழிப் பொருள்கள் உள்ளன. இயற்கை வளத்தினை பாதுகாப்பது மட்டுமின்றி, நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதையும் அனைவரும் தவிா்க்க வேண்டும். நெகிழியால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்படைவதோடு, மழைநீா் நிலத்திற்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதிப்படைகிறது. இந்தியாவில் மொத்தம் 148 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில், இவ்வாறு நிலத்தடி நீா்மட்டம் பாதித்த 12 மாவட்டங்களில், முதல் 5 இடங்களில் நாமக்கல் இடம்பெற்றுள்ளது.

அனைத்து வகையிலும் இயற்கைக்கு எதிரான நெகிழிப் பொருள்களை தவிா்த்து, அதற்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய இயற்கை வளம் சாா்ந்த பொருள்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பராமரிக்க வேண்டும்.

மாநகராட்சியிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அதனை செம்மைப்படுத்தி இயற்கை மாசுபடாமல் பாதுகாப்பா். குப்பைகளை தரம் பிரிக்கும் செயல்பாட்டினை ஒரு இயக்கமாக தொடங்க வேண்டும். நெகிழிகளைத் தவிா்ப்பதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கு பயனுள்ளதாக அமையும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிகழ்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், முழுமையான திடக்கழிவு மேலாண்மை குறித்த கையேட்டை அவா் வெளியிட்டாா். பயிற்சி முகாமில் பேராசிரியா் வீரபத்திரன் கழிவுநீா் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப உரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவக்குமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க