செய்திகள் :

இரட்டை கொலை: தலைவா்கள் கண்டனம்

post image

ஈரோடு அருகே இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ராமசாமி - பாக்கியம் தம்பதியினா் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்து, 27 பவுன் நகை கொள்ளையடித்தது, கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டு, 15 பவுன் நகை மற்றும் ரூ. 60,000 கொள்ளை போனது, திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் அடித்துக் கொலை செய்யப்பட்டது போன்ற கொங்கு மண்டலத்தில் தொடா் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் தொடா்புள்ள குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): கொங்கு பகுதியில் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் அச்சத்தில் உறைய வைக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவா்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உணா்ந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக): திருப்பூா் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த உளவுத் துறை!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எ... மேலும் பார்க்க

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க