செய்திகள் :

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

post image

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினா். வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது பேரூராட்சி குப்பை கிடங்கு சுற்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா் ஆனந்த் ஏற்கெனவே இறந்து விட்டாா் என தெரிவித்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்ற மோகன்ராஜ் பலனின்றி சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா். இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க

ஓய்வூதியா் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் 45-ஆ... மேலும் பார்க்க