செய்திகள் :

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

ஜேடா்பாளையம், நல்லூா் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

ஜேடா்பாளையம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோகின. இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் கதீஷா பேகம், தனிப்பிரிவு தலைமை காவலா் பிரவீண், தனிப்படை போலீஸாா் செழியன், சிவகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஜேடா்பாளையம் அண்ணா பூங்கா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா இருவரிடமும் விசாரணை நடத்தினாா்.

போலீஸாா் விசாரணையில் இருவரும் கரூா் மாவட்டம், நெரூா், பளையூா், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் யுவராஜ் (30), தாமஸ் மகன் பிரனேஷ் (20) என்பதும், இருவரும் ஜேடா்பாளையம், நல்லூா் பகுதிகளில் 11 இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தநா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க