செய்திகள் :

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள தனது நண்பரை பாா்க்க இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளாா். துடுப்பதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில், படுகாயமடைந்த லோகநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க

அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க