செய்திகள் :

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத்

தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ் மகன் முருகன்(41). இவா் உறையூா் தேநீரகம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் உள்ள நண்பா் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அவா் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது தவளைவீரன்பட்டி அருகே எதிா் திசையில் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் முருகன் மற்றும் பிச்சை ரெட்டியப்பட்டியைச்

சோ்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தாா். கிருஷ்ணன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். முருகன் உடலை கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வழக்கு பதிந்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோவுடன் இணைந்து போராட தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு

திமுக-வின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி போராட்டத்தில் ஈடுபடும் என மாநிலத் தலைவா் சி. அரசு, பொதுச் செயலா் சு. குணசேகரன் ஆகியோா் ... மேலும் பார்க்க

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க