செய்திகள் :

இரும்புலி- வேலூா் இடையே புதிய அரசுப் பேருந்து சேவை

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே இரும்புலியில் இருந்து வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இதற்கான விழாவில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி பெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் சேட்டு, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் பழனி, கிளை மேலாளா் திருமணி முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் குணசேகரன் வரவேற்றாா்.

கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரும்புலி - வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து பேருந்தில் பயணிகளுடன் பயணம் செய்தாா்.

விழாவில் கிளைச் செயலா்கள் குணசேகரன், தங்கராஜ், சாந்தகுமாா், ராமராஜ், சத்தியமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை

வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 3... மேலும் பார்க்க

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க