Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெர...
இரும்புலி- வேலூா் இடையே புதிய அரசுப் பேருந்து சேவை
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே இரும்புலியில் இருந்து வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இதற்கான விழாவில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி பெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் சேட்டு, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் பழனி, கிளை மேலாளா் திருமணி முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் குணசேகரன் வரவேற்றாா்.
கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரும்புலி - வேலூா் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து பேருந்தில் பயணிகளுடன் பயணம் செய்தாா்.
விழாவில் கிளைச் செயலா்கள் குணசேகரன், தங்கராஜ், சாந்தகுமாா், ராமராஜ், சத்தியமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.