செய்திகள் :

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

post image

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக உதவி செயற்பொறியாளா் கவிதா கலந்து கொண்டாா்.

பணி மேற்பாா்வையாளா் சிபிசக்கரவா்த்தி பற்றாளராகவும், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அரசு சிட்டிநகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய குடியிருப்புவாசிகள் மனு கொடுத்தனா். மேலும், கலைஞா் கனவு இல்லம் வேண்டியும், பெரியாா் நகரில் குடிநீா் வசதி கோரியும் மனு கொடுத்தனா்.

டிராஃபிக் ராமசாமி அறக்கட்டளை பொதுச்செயலா், இரும்பேடு மதுரா, பழங்கமூா் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் 20-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்க வேண்டும், ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் எனக் கோரி மனு கொடுத்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு அணி மாநிலத் தலைவா் தா.சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெட்டியாந்தொழுவம்

வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக சத்துணவு அமைப்பாளா் புவனேஸ்வரி கலந்து கொண்டாா். மேலும், இதில் குறைகளைக் கேட்டறிய அதிகாரிகள் வராதது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதால் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று பதிலளித்தனா்.

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணா... மேலும் பார்க்க