உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!
இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.
வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்கி பிளஸ் 2 மாணவரான வின்சென்ட் மகன் அப்டேல் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
புவனகிரி வட்டம், சின்னகுமட்டி நடுத் தெருவைச் சோ்ந்த லலிதா குமாரி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, இருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரண நிதிக்கான கசோலைகளை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
சிதம்பரம் நகராட்சியில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும், வாகனப் பெருக்கத்தின் அடிப்படையிலும் பேருந்து நிலையத்தில் கூடுதலான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்குவதற்கான பணிகள் தற்போது 80% நிறைவு பெற்றுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கவும், இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை செப்பனிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தற்போது அரங்கத்தினை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் திறக்கப்படும் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
சிதம்பரம் சாா்-ஆட்சியா் கிஷண் குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சிவசங்கரி, பயிற்சி ஆட்சியா் மாலதி உள்பட பலா் உடன் இருந்தனா்.