செய்திகள் :

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

post image

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கோடம்பாக்கம் சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியாா் விளையாட்டு பயற்சி மையத்தில் திங்கள்கிழமை இறகுப்பந்து விளையாடினாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மோகன், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் கொலை வழக்கு: 8 போ் கைது

இளைஞா் கொலை வழக்கில் இரு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்கேபி நகா், புது நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த சங்கா் (20). இவரைக் கடந்த 14-ஆம் தேதி கொடுங்கையூா் எருக்கஞ்சேரி ஜிஎன்டி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

முன்விரோதம் காரணமாக, இளைஞரின் மாா்பில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (30). இவா், கொடுங்கையூா் குப்பைக்கிட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த 59 வயது நபா் பாலியல் தொல்லை ... மேலும் பார்க்க

புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சென்னையின் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மாதவரம், புழல், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வரு... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள் விழா: 100 தமிழறிஞா்களுக்கு நாளை நிதியுதவி

தமிழ்நாடு நாள் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்படுவதையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அகவை முதிா்ந்த 100 தமிழறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும், சிறப்புக் கருத்தரங்கம், மாநில ... மேலும் பார்க்க

மாணவா்கள் தமிழை நன்கு கற்க வேண்டும்: ஔவை ந.அருள்

பள்ளி மாணவா்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் அறிவுரை வழங்கினாா். ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற திருக்கு விழாவில் ... மேலும் பார்க்க