செய்திகள் :

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

post image

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இவ்வளவு பெரிய தொகை அவரது வங்கி சேமிப்பு கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நேற்று காலை பத்திரிகையாளர் சச்சின் குப்தா இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன்படி இந்தத் தொகையை லட்சம் கோடி என்று குறிப்பிட்டார். தற்போது வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணம்

நியூஸ் 24 அறிக்கையின் படி, இந்த வங்கி கணக்கு முதலில் தீபக்கின் தாயார் காயத்ரி தேவி பெயரில் இருந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்ததை அடுத்த தீபக் இந்த சேமிப்பு கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு தீபக்குக்கு 1.13 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

இதனை அடுத்து குழப்பமடைந்த தீபக் இந்த செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்து இந்த தொகை குறித்து பார்க்குமாறு கேட்டு இருக்கிறார்.

மறுநாள் காலையில் தீபக் வங்கிக்கு நேரில் சென்று இந்த பண பரிமாற்றம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

வங்கி அதிகாரிகள் இந்த தொகை இருப்பதை உறுதி செய்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான இந்த பரிமாற்றம் காரணமாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த பண பரிமாற்றம் ஒரு தொழில்நுட்ப பிழையா வங்கி முறைகேடா அல்லது பண மோசடி வழக்கா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இந்த நிதியின் உண்மையான சோர்ஸ் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.இரண்ட... மேலும் பார்க்க

Eng v Ind : `டெஸ்ட் போட்டினா இதுதான்.!’ - இந்தியாவின் த்ரில் வெற்றியின் திக் திக் மொமென்ட்ஸ் | Album

Eng v Ind | இந்தியாEng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind E... மேலும் பார்க்க

Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழும் தம்பதி - எப்படி?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் ... மேலும் பார்க்க

Trending: உலகின் வயதான குழந்தை - எப்படி நிகழ்ந்தது இந்த அறிவியல் அதிசயம்? | விரிவான தகவல்கள்

அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..? லிண்ட்சே , டிம... மேலும் பார்க்க