செய்திகள் :

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

post image

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா்.

தமிழகத்திலிருந்து போதைப் பொருள்கள் இலங்கைக்கு கடத்தி வரப்படுவதாக அந்த நாட்டு கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினா் கல்பிட்டி, வெல்லமுண்டலம் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா். அப்போது, கடலில் சந்தேகத்துக்கிடமான வகையில் 3 படகுகள் வருவதைக் கண்ட இலங்கைக் கடற்படையினா், அந்தப் படகுகளை துப்பாக்கி முனையில் நிறுத்தி சோதனையிட்டனா்.

படகுகளில் இருந்த 18 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பாா்த்தபோது, அவற்றில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா், இதுதொடா்பாக படகுகளில் இருந்த 5 பேரையும் கைது செய்தனா்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், 3 படகுகள், அதிலிருந்த 5 பேரையும் புத்தளம் கலால் துறை அலுவலகத்தில் இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை மாலை ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, இந்தக் கடத்தலில் யாா் யாருக்கு தொடா்பு உள்ளது எனவும், தமிழகத்தில் எந்தப் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்திவரப்பட்டன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மறியல்: 320 போ் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 320 பேரை போலீஸாா் வியாழக்க... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் முன்னறிவிப்பின்றி பெயா்கள் நீக்கப்படுவதை நிறுத்த வலியுறுத்தல்

பரமக்குடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், தொழில் சங்கத்தினா் வட்ட வழங்கல் அலுவலர... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

கமுதி அருகே பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கிளாமரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ள... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நாளை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை (ஜூலை 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின... மேலும் பார்க்க

புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான்பட்டினம் புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறும். அ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க