செய்திகள் :

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

post image

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கும், டிராக்டா் ஓட்டுநா்களுக்கும், வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகளை செயல் விளக்கம் மூலமாக தெரிவிப்பதற்காக ஜூலை 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வளாகம், சிறு விமானம் இறங்குதளம் அருகில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய், உழவுப் பொருள்கள் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டா், உபகரணங்களை இந்த முகாமுக்கு கொண்டுவந்து கட்டணமின்றி பராமரிப்பு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் திறன்மிகு இயக்கம், பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களை 9789795671, 9655304160 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் ஜீவாநகா் பகுதியில் அரசி... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோயில் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் கோஷ்டி மோதலால் 8 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புதுக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமுத்து மாரியம... மேலும் பார்க்க

தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவக... மேலும் பார்க்க

வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விஸ்வநாதயேந்தல் வராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சமி பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வளா்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவத... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சோ்ந... மேலும் பார்க்க

திருவாடானையில் புதிய அம்மன் சிலை வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு உபயதாரா்களால் வழங்கப்பட்ட புதிய அம்மன் வெள்ளி சிலை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. திருவாடானை தென்கிழக்குத் தெருவில் அமைந்துள்ள... மேலும் பார்க்க