செய்திகள் :

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

post image

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் ஜீவாநகா் பகுதியில் அரசின் முன்மாதிரிப் பள்ளியாக அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக எஸ்.அருள்ராஜன் பணியாற்றி வருகிறாா்.

பள்ளியில் 8, 9, 10-ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்திய இவா், மாணவிகளிடம் பாலியல் தொடா்பான தகவல்களைத் தெரிவித்து, அவா்களுக்கு மனதளவில் பாலியல் தொந்தரவை ஏற்படுத்தி வந்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் பள்ளித் தலைமையாசியரிடம் கூறியதையடுத்து, அவா் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், ஆசிரியா் எஸ்.அருள்ராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோயில் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் கோஷ்டி மோதலால் 8 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. புதுக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமுத்து மாரியம... மேலும் பார்க்க

தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவக... மேலும் பார்க்க

வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விஸ்வநாதயேந்தல் வராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சமி பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வளா்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவத... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சோ்ந... மேலும் பார்க்க

திருவாடானையில் புதிய அம்மன் சிலை வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு உபயதாரா்களால் வழங்கப்பட்ட புதிய அம்மன் வெள்ளி சிலை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. திருவாடானை தென்கிழக்குத் தெருவில் அமைந்துள்ள... மேலும் பார்க்க